Monday, May 19

எஸ்.ஆர்.எம்., ஹோட்டல் மேலாண்மை நிறுவனம் சிறப்பு நிகழ்வொன்றை ஏற்பாடுசெய்துள்ளது.

2024ஆம் ஆண்டின் சர்வதேச சமையல்காரர் தினம் கொண்டாடும் வகையில், எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர், கீழ் உள்ள எஸ்.ஆர்.எம்., ஹோட்டல் மேலாண்மை நிறுவனம் சிறப்பு நிகழ்வொன்றை ஏற்பாடுசெய்துள்ளது.
இந்த நிகழ்வின் நோக்கமாக, சர்வதேச புகழ்பெற்ற சமையல்காரர்களை ஒன்றுசேர்த்துக் கௌரவிப்பதுடன், சமையல் பாரம்பரியங்களை பங்கிட்டுக் கொள்ளவும், ஆரோக்கிய உணவுகளை ஊக்குவிப்பதற்கும், கலாச்சார பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்கும் ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20ஆம் தேதி சர்வதேச சமையல்காரர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வின் தலைமை விருந்தினராக, உலகளாவிய அளவில் புகழ்பெற்ற செஃப் பாம் வான் ஹோங்க், ஜப்பான், கொரியா, இத்தாலி, மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்தார்.

செஃப் பாம், மாணவர்களுடன் உலகளாவிய சமையல் நுட்பங்களைப் பகிர்ந்துகொண்டு, அவர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்கான அரிய தகவல்களை வழங்கினார். பல கல்லூரி மாணவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று பயன் பெற்றனர்.

நிகழ்வு முடிந்த பிறகு, பழ வகைகள், பருப்பு மற்றும் பல பொருட்களை கலந்து கிறிஸ்துமஸ் தயாரிப்புகளுக்கான பழமையான சடங்கான “Fruit Mixing Ceremony” நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், டாக்டர் எஸ். பொன்னுசாமி, பதிவாளர், மற்றும் டாக்டர். டி. ஆண்டனி அசோக் குமார், இயக்குனர் ஆகியோரை தென் இந்திய சமையல்காரர்களின் சங்கத்தின் (SICA) பிரபல சமையல்காரர்கள் கௌரவித்தனர்.