தமிழின உணர்வாளர்’ வ. கௌதமன் நடிக்கும் ‘படையாண்ட மாவீரா
*'தமிழின உணர்வாளர்' வ. கௌதமன் நடிக்கும் 'படையாண்ட மாவீரா' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*
*'படையாண்ட மாவீரா' திரைப்படத்தை செப்டம்பர் 19ம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் சுஷ்மா சினி ஆர்ட்ஸ் ஜி. என். அழகர் வெளியிடுகிறார்*
இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, 'பாகுபலி' பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், 'ஆடுகளம்' நரேன், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, மதுசூதன் ராவ், 'நிழல்கள்' ரவி , 'தலைவாசல்' விஜய், சாய் தீனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி. எஸ். இசையம...