Tuesday, May 13

நேற்றைய ஆளுனர் சந்திப்பை

நேற்றைய ஆளுனர் சந்திப்பை

(நான் எதைச் சொல்ல விரும் பி னேனோ அதற்கு)

சரியாகப் பயன்படுத்திக் கொ ண்டேன். முதலில் தமிழில் சட் டை உடுத்திக் கொண்டேன்.
உவே சாமிநாதையரின் ‘என் ச ரித்திரம்’ புத்தகத்தை நீட்டி னே ன். பேச்சின் முதல் வரியாக “தமி ழின் ஆளுமை சுப்ரமணிய பார திக்கு என் முதல் வணக்கம்” என் று துவங்கி “தமிழக ஆளுனருக் கு மரியாதை” எனத் தொடர்ந்தே ன். தமிழின் பெருமையும் தமிழ க பண்பாடும் காக்கப்படவேண் டும் என்பதை வலியுறுத்தும் வி தமாகவே எல்லா சொற்களையு ம் பயன்படுத்தினேன். “பையன் ரொம்ப நல்லா படிக்கிறான் போ ல” என்று சொல்லும் போது ஒரு வேளை அப்பையன் சரியாக படி க்காதவனாயிருந்தால் உள்ளு க்குள்ள உறுத்தும்!

அப்படித்தான் தமிழ் பண்பாட் டை கவர்னர் நன்றாக பாதுகாக் கிறார் என்ற வாக்கியத்தில் உ ள்ள உள்குத்தையும் கவனிக்க வேண்டும்! இப்படிபட்ட தொனி யில் நான் பேசுவதை கேட்ட நீதி யரசர் சந்துரு ஒருமுறை “இது ஒ ரு வகையான positive politics “ என்றார்.

பேச்சின் இடையே எங்கப்பா குடி ச்ச பீடியின் பெயர் கவ ர்னர் பீடி’ என்று கலாய்த் தேன் , சல சலப் பை உருவாக்கி குலுங்கியது. அவர் புரியாமல் பார்த்தார் sorry to say this எனக் கூறி அதையே ஆங்கிலத்தில் கூற அவருக்கு புரிந்திருக்கும், புகைந்தி ருக்கு ம்!

தொடர்ந்து எங்ப்பாவை பீடி குடி க்கிறதை நிறுத்துங்கன்னு சொ ன்னா”கவர்னரே பீடி குடிக்கும் போது நான் குடிச்சாஎன்ன ன்னு” ” கேப்பாரு என்று கேட் பா ரற்று பேச காட்டாறாக சிரிப் பொலி. பீடிக்கு கவர்னர் பீடி என பெயர் வைத்ததை வன்மை யா கக் கண்டிக்கிறேன் என்றேன். காச நோயை கூட குணப்படுத் திவிடலாம் இந்த காசுநோய் உ யிர் கொல்லி என்றேன். பணக் காரன் ஏழைக்கு உதவுவதை விட, ஏழைக்கு ஏழைதான் அதிக மாக உதவுகிறான். என்பதாக கூறி “கவர்னருக்கு கொஞ்சம் தமிழ் புரியும் மேலும் தமிழை அவர் கற்று வருகிறார் என்று அவர் P A கூறினார் எனவே அவர் தமிழன் பெருமை உணர தமிழின் செழுமையை வாசிக்க புத்தகம் வழங்கினேன். தமிழ்நாட்டில் தமிழ் பண்பாட்டை காப்பதற்கு நன்றி” எனக் கூறி விடை பெற்றேன்.

இந்(தி)த கோட்டைக்குள் சென் று ஆனந்தமாய்
1-தமிழ்
2-தமிழ்
3-தமிழ்
என செம்மொழியில் கர்ஜித்து விட்டே வந்தேன்.
வாய்ப்பை ஒதுக்கி ‘சங்கீ’தம் பாடுவதை விட, கிடைத்த வாய்ப்பை செதுக்குவதே மேல். இதற்கு மேல் முறையீடு செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

பின்குறிப்பு:
பத்ம விருதோ
கட்டு கட்டாக காந்திகளோ- ஏன் ? ஒரு
கட்டு கவர்னர் பீடியோ கூட தட்சனையாகப் பெறவில்லை
மாறாக
நான் என் பணத்தையும் நேரத்தையும் செலவிட்டு அம்மாளிகையில் தமிழ் கொடியேற்றி விட்டு வந்தேன்!
ஒவ்வொருவருக்கும் சொல்லும் பாணியென்று ஒன்று உண்டு. அதனால் மட்டுமே அவரை வசைமொழியில் சங்கீ’தமாய் பாடக்கூடாது.