மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் ‘மாகாளி’
மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் ‘மாகாளி’ – பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!
தமிழ் சினிமாவில் தனித்துவமான, சமூக அக்கறை கொண்ட படைப்புகளால் கவனம் ஈர்த்து வரும் மாரி செல்வராஜ் வழங்கும் புதிய திரைப்படம் ‘மாகாளி’. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது.
நடிகர் அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை, மாரி செல்வராஜின் இணை இயக்குநரான எஸ். பி. அரவிந்த் எழுதி இயக்குகிறார். சமூகத்தின் முக்கியமான ஒரு பிரச்சினையை அழுத்தமாகவும் தாக்கமிக்க வகையிலும் பேசும் படைப்பாக ‘மாகாளி’ உருவாகி வருகிறது.
இப்படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் சார்பாக K. கருணாமூர்த்தி - நவ்வி ஸ்டுடியோஸ் சார்பாக திவ்யா மாரி செல்வராஜ் மற்றும் மாரி செல்வராஜ் இணைந்து தயாரிக்கின்றனர்.
மனித வாழ்வின் வலி, எல்லைகள் மற்றும் ஒரு ஆழமான சமூக அக்கறை கொண்ட அழுத்தமான கதைக்களத்தில் ரசிகர்களை நெகிழச் செய்யு...
