Saturday, April 25

Tag: ஓவியர் திரு. மணியம் அவர்கள் வாழ்ந்த நாற்பத்தினான்கு ஆண்டுகளில்

ஓவியர் திரு. மணியம் அவர்கள் வாழ்ந்த நாற்பத்தினான்கு ஆண்டுகளில்,
CALTURAL, TAMIL, TAMILNADU

ஓவியர் திரு. மணியம் அவர்கள் வாழ்ந்த நாற்பத்தினான்கு ஆண்டுகளில்,

 இருபத்தியெட்டு ஆண்டுகள் ஓவியத்திற்காகவே வாழ்ந்தார். அவர் படைத்த ஓவியங்கள் ரசிகர்களின் நினைவிலும், மனதிலும் அமர்ந்து கொண்டன. த ம்முடைய வாழ்நாள் முழுவதிலும் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதில் ஓய்வே இல் லா மல் உழைத்தார். ஒரு தனித்த பாணியுடன் சித்திரங்கள் வரைந்து ஓவிய உலகில் நிரந்தரமாய்த் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் பிரபல ஓவியர் அமரர் மணியம். 1941 ஆம் ஆண்டில் கல்கி பத்திரிகையைத் தொடங்கினார்கள். இளைஞர் மணியம் அவர் களிடம் புதைந்து கிடக்கும் கலைத்திறமையை 'ஆசிரியர் கல்கி" அவர்கள் இனம் கண்டு தம்முடைய பத்திரிகையில் ஓவியராக வேலை வாய்ப்பை வழங்கினார். 1944 ஆம் ஆண்டில் மணியம், ஆசிரியர் கல்கி அவர்களோடு அஜந்தா எல்லோரா குகைக் கருவூலங்களைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. அஜந்தா ஓவியங்கள் மணியம் அவர்க ளின் வண்ணச் சித்திர மடல்கள் 1944 ஆம் ஆண்டு கல்கி தீபாவளி மலரில் வெளியிடப் பட்டன. அவருடைய நீட...