மய்யமும் நீலமும் ஒன்றுதான் -பத்மஸ்ரீ கமல்ஹாசன்.
மய்யமும் நீலமும் ஒன்றுதான் -பத்மஸ்ரீ கமல்ஹாசன்.
இயக்குநர் பா. இரஞ்சித் ' நீலம் புக்ஸ்' புத்தக விற்பனையகத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி இ ன்று (12.2.2023 ) எழும்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பத்ம ஸ்ரீ கமல்ஹாசன் வரு கை தந்தார்
பெரும் திரளான புத்தக வாசிப்பாளர்களும், ரசிகர் கூட்டமும், பத்திரிகை நண்பர்களும் க லந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தனர். நீலம் புக்ஸ்' புத்தக விற்பனையகம், அ னைத்து விதமான கலை பண்பாட்டு இலக்கிய செயல்பாடுகளுக்கான தளமாக இயங்கவு ள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன்,
உயிரே உறவே தமிழே..
இந்த வாக்கியத்தை நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தி இருந்தாலும் இதுதான் என்னுடைய வாழ்க்கையின் உண்மை தத்துவம். அலங்காரத்திற்காக சொல்லும் வார்த் தை அல்ல இது. இந்த உறவு இருந்தால்தான் என்னால் உயிர்வாழ முடியும். இது மூன்றை யும் காக்க வேண்டியது என் கடமை.
...
