49வது புத்தக கண்காட்சியில் விஜய் மில்டனின் காதல் கவிதைகளானது
49வது புத்தக கண்காட்சியில்
விஜய் மில்டனின் காதல்
கவிதைகளானது
49வது புத்தக கண்காட்சியில் ஆனந்த விகடன் பிரசுரித்து
விஜய் மில்டன் கவிதைகள் நூலை வெளியிட்டது.
காதலும் காதல் சார்ந்தவைகளும் என்ற தலைப்பு சொல்லோடு இருக்கும் இந்த கவிதை புத்தகம். மனுஷ்ய புத்திரன்,கலாப்ரியா,
இயக்குனர் பாலுமகேந்திரா, இயக்குனர் ரா. பார்த்திபன், இயக்குனர் அகத்தியன், இயக்குனர் பிருந்தா சாரதி அனைவரின் அணிந்துரையோடு வந்திருக்கிறது.
ப்ரியமுடன் காதல், ஆட்டோகிராப், வழக்கு எண் 18/9, தீபாவளி,
கோலி சோடா, மழை பிடிக்காத மனிதன், 10 எண்றதுக்குள்ள
போன்ற திரைப்படங்களில் கேமரா வழியாக கவிதை சொன்ன விஜய் மில்டன். புத்தகம் வழியாக கவிதை சொல்லயிருக்கிறார்.
புத்தகத்தை படித்த கலாப்ரியா இப்படி சொல்கிறார்,
" இந்த கவிதைகள் இயல்பாகவே என்னைக் கவர்ந்ததில் எந்த வியப்புமில்லை. விஜய் மில்டன்,'ரோஜா கனவு', 'வெள்ளைப் புறாக்கதை' ப...
