திருத்தணி சம்பவத்திற்கு தற்போதைய சினிமாவும்
திருத்தணி சம்பவத்திற்கு தற்போதைய சினிமாவும் காரணம்! ---இயக்குனர் பேரரசு!
நாட்டில் நடக்கும் தொடர் வன்முறைக்கு அரசாங்கத்தையும், அரசியல்வாதிகளையும், காவல் துறையையும் சமூக அவலங்களையும் மட்டும் குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம். இதற்கு சினிமாவும் பொறுப்பேற்க வேண்டும்! சில சினிமாக்களும் இதுக்கு காரணம் என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்!
எம்.ஜி.ஆர், ஜெய்சங்கர், ரஜினிகாந்த் (பழைய படங்கள்) விஜயகாந்த் போன்ற பல ஆக்சன் ஹீரோக்களின் படங்கள் வந்திருக்கிறது. அப்போதெல்லாம் இப்படி வன்முறையான சண்டைக் காட்சிகள் இருந்ததில்லை!
கம்பராமாயணம் படமாக்கப்பட்டிருக்கிறது, மகாபாரதம் படமாக்கப்பட்டிருக்கிறது. இதில் வரும் யுத்த களத்தில் ஆயிரக்கணக்கான பேர் மோதிக் கொண்டாலும், பலியானாலும் எதிலுமே முகம் சுழிக்கும் வன்முறை தெரிந்ததில்லை!
கலிங்கத்துப் போரைவிடவா சண்டை இருந்துவிடப் போகிறது? ராணுவ சண்டை காட்சிகள் நி...









