காலத்தைத் தாண்டி நம்முடன் பயணிக்கும் சில குரல்கள் உண்டு.
காலத்தைத் தாண்டி நம்முடன் பயணிக்கும் சில குரல்கள் உண்டு.
அவை நம்முள் ஒரு தாக்கத்தை மட்டும் உருவாக்குவது அல்ல, வாழ்நாள் துணையாகவே மாறிவிடும்.
நம் ஆனந்தம், துயரம், சொல்ல முடியாத ஏக்கம் — எல்லாவற்றிலும் அவை ஒலித்துக்கொண்டே இருக்கும்.
வாணி ஜெயராம் அவர்களின் குரல் அப்படிப்பட்ட ஒரு அரிய பொக்கிஷம்.
அவரின் மறைவின் மூன்றாம் ஆண்டு நினைவாக, விஸ்வராகாம் – பாகம் 2 ஒரு பணிவான நினைவஞ்சலியாக சமர்ப்பிக்கப்படுகிறது.
இசையில் அவர் வெளிப்படுத்திய அதே நயமும், உண்மையும், இந்த ஆல்பத்தின் ஒவ்வொரு நொடிகளிலும் பிரதிபலிக்கின்றன.
🎼 விஸ்வராகம் பாகம் 2 : இசை நினைவஞ்சலி
இந்த இசைத் தொகுப்பின் மையத்தில்,
தென்னிந்திய சினிமாவின் உணர்ச்சிப் பிம்பத்தை உருவாக்கிய மகா இசையமைப்பாளர்
M. S. விஸ்வநாதன் (MSV) அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
தலைமுறைகளைத் தாண்டி வாழும் அவரது மெட்டுகள், இன்றும் நினைவுகளில் இசைக்...








