*பூஜையுடன் துவங்கிய புதிய ப டம் ‘சதுரங்க ஆட்டம் ஆரம்பம்’
*“மக்களுக்கு பயந்து நாம் படம் எ டுக்க வேண்டும்” ; ‘சதுரங்க ஆட்ட ம் ஆரம்பம்’ பட துவக்க விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு*
*”தயாரிப்பாளர் கொடுப்பது வாய் ப்பு அல்ல.. வாழ்க்கை.. அதை சரி யாக பயன்படுத்த வேண்டும்” ; ‘ச துரங்க ஆட்டம் ஆரம்பம்’ பட துவ க்க விழாவில் இயக்குநர் பேரரசு அறிவுரை*
*”உண்மை சம்பவங்களை மைய ப்படுத்தி உருவாகும் ‘சதுரங்க ஆ ட்டம் ஆரம்பம்’” ; இயக்குநர் ராமச் சந்திரன்*
வி வி எஸ் சுப்ரீம் பிலிம்ஸ் (VVS Su prem Films) சார்பில் வினோத் வி ச ர்மா தயாரிப்பில் உருவாகும் படம் ‘சதுரங்க ஆட்டம் ஆரம்பம்’. M.V ரா மச்சந்திரன் இயக்குனராக அறிமு கமாகும் இந்தப்படத்தில் முக்கிய மான மூன்று முதன்மை கதாபா த் திரங்களில் ‘முருகா’ அசோக் குமா ர், மரகதக்காடு படத்தில் நடித்த ந டிகர் அஜய். மற்றும் ஒருவர் என மூவர் நடிக்கின்றனர்.. கதாநா யகி யாக சோனியா நடிக்க லொள்ளு சபா மாறன் முக்கிய வேடத்தில் ந டிக்கிறார்.
இந்தப்படத்தின் பூஜை பிரசாத் 70 எம் எம் ஸ்டுடியோவில் நடைபெற் றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் பேரரசு கலந்து கொண் டு படக்குழுவினரை கவுரவித்து வாழ்த்தினார். மேலும் இந்த நிகழ் வில் இயக்குநரும் நடிகருமான ஆ ர்.அரவிந்தராஜ்,, நடிகர் சக்தி குமா ர், லொள்ளு சபா மாறன், இயக்கு நர் பாரதி கணேஷ், நடிகர் ரோபோ கணேஷ், விநியோகஸ்தர் ஆக்சன் ரியாக்சன் ஜெனிஸ் உள்ளிட்ட பல ர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
*இந்த நிகழ்வில் இயக்குநர் பேரரசு பேசும்போது,*
“இந்த படத்தின் தயாரிப்பாளர் வி னோத் வி சர்மா என்னிடம் சொல் லும்போது இயக்குநர் ராமச்சந்திர னின் தன்னம்பிக்கை மற்றும் க தையை நம்பித்தான் இந்த படத் தை ஆரம்பித்துள்ளேன் என்று சொன்னார். இப்போதுள்ள சூழ் நிலையில் நல்ல கதை இருந் தா லே மக்கள் வரவேற்பு கொடுத்து விடுவார்கள். இன்றைக்கு ஓப்ப னிங் என்பது ஒரு நான்கைந்து ஹீரோக்களுக்கு மட்டும் தான் இரு க்கிறது. மற்றபடி என்ன தான் பெ ரிய பட்ஜெட்டில் படம் எடுத் தா லு ம் வேறு பெரிய ஹீரோக்கள் நடித் தாலும் மக்களுக்கு பிடித்திருந்தா ல் தான் அந்த படம் வெற்றி அடை கிறது.
அன்று ஒரு படம் பரவாயில்லை என்று சொல்லப்பட்டாலே அது கி ட்டத்தட்ட வெற்றி படம் போல தா ன். ஓரளவுக்கு வசூலித்தும் விடு ம். ஆனால் இப்போது நிலைமை மாறி உள்ளது. ஒரு முதல் படத்தி ன் இயக்குநராக நாம் மிகப்பெரிய வெற்றியை பெறுகிறோம் என்ப தைவிட நம்மை நம்பிய தயாரிப் பாளரின் நம்பிக்கையை காப்பா ற்ற வேண்டும். அதை செய்தாலே அவர் மிகப்பெரிய ஆளாகி விடு வார். அந்த வகையில் இயக்குநர் ராமச்சந்திரன் கடின உழைப்பா ளி. தயாரிப்பாளரின் நம்பிக்கை யை நிச்சயம் காப்பாற்றுவார்.
என் முதல் படத்தில் நடிகர் விஜய் யிடம் சென்று கதை கூறியபோது மூன்றாவது முறை அவர் ஓகே எ ன்று சொன்னார். அவர் அப்படி சொன்னவுடன் தான் எனக்கு மி கப்பெரிய பயம் வந்தது. நான் ஒரு அறிமுக இயக்குனர். அவர் மாஸ் ஹீரோ. நம்மை நம்பி, கதையை ந ம்பி நம்மிடம் ஒப்படைத்து இருக் கிறார் என்று. ஆனால் படம் முடித் து விட்டு விஜய் சார் பார்த்துவிட் டு நீங்கள் கதை சொன்னதை விட மூன்று மடங்கு நன்றாகவே எடுத் திருக்கிறீர்கள் என்று சொன்னார். அப்போதுதான் எனக்கு திருப்தி வந்தது. ஒரு தயாரிப்பாளர், ஒரு உதவி இயக்குநருக்கு கொடுப்பது வாய்ப்பு அல்ல வாழ்க்கை. அதை வாய்ப்பாக நினைக்காமல் வாழ்க் கையாக நினைக்க வேண்டும்.
இப்போதைய காலகட்டத்தில் ஒரு படத்தை முதல் நாளில் இருந்தே விமர்சனங்கள் ரொம்பவே பாதிக் கின்றனவோ என்கிற பயம் தயாரி ப்பாளர்களுக்கு வந்திருக்கிறது. அதனால் தான் அவர்கள் நீதிமன் றத்தை நாடினார்கள். ஆனால் ஒ ரு படத்திற்கு நல்ல விமர்சனத் தை சொல்லும்போது ஏற்றுக் கொ ள்ளும் உங்களுக்கு அதே நபர்கள் உங்களுக்கு எதிராக விமர்சனம் சொல்லும்போது ஏன் ஏற்றுக் கொ ள்ள முடியவில்லை என்கிற ஒரு கே inள்வியை நீதிமன்றம் கேட்டு ள்ளது. சரியான கேள்விதான். அ தே சமயம் விமர்சனங்கள் நாகரி கமாக, ஆரோக்கியமாக, நேர்மை யாக இருக்க வேண்டும். விமர்சன ம் அவதூறாக இருந்தால் காவல்து றையில் புகார் அளிக்கலாம் என் றும் நீதி மன்றம் கூறியுள்ளது.
முன்பெல்லாம் பத்திரிகை, டிவி விமர்சனங்களை பார்த்துவிட்டு ம க்கள் படத்திற்கு சென்றார்கள். இ ப்போது மக்களே விமர்சகர்கள் ஆ கிவிட்டார்கள். மக்களுக்கு பயந்து நாம் படம் எடுக்க வேண்டும். நி றைய சிறு தயாரிப்பாளர்கள் இப் படி நிறைய தொழில்நுட்பக் க லைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப் பது என்பது ஒரு மிகப்பெரிய பு ண்ணியம். அந்த புண்ணியமே உ ங்களுக்கு வெற்றியாக அமையும்” என்றார்.
*தயாரிப்பாளர் வினோத் வி சர்மா பேசும்போது,*
“திரைப்படம் என்பது வெறும் க தை அல்ல. அது உணர்ச்சிகளின் சங்கமம். கனவுகளின் வெளிப்பா டு. மற்றும் பலரின் உழைப்பின் சா ட்சி. எங்கள் படக்குழுவினரின் தி றமை, ஆற்றல், உழைப்பு இந்த பட த்திற்கு மெருகூட்டும் என்கிற நம் பிக்கை இருக்கிறது. இந்த படத்தி ற்காக உழைத்த அனைத்து தொழி ல்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கி றேன். உங்கள் அனைவரின் ஆதர வுடன் இந்த பயணத்தை வெற்றி கரமாக முன்னெடுப்பேன் என நம் புகிறேன். நன்றி வணக்கம்” என் று கூறினார்.
*இயக்குனர் M.V.ராமச்சந்திரன் பே சும்போது,*
“இந்த படத்தை இயக்குவதற்கு, வாய்ப்பு கொடுத்த என்று சொல்ல முடியாது.. வாழ்க்கையே கொடுத் த தயாரிப்பாளருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் னுடைய 24 வருட போராட்டம், ப ல இழப்புகளுக்கு பிறகு தான் இந் த வாய்ப்பு எனக்கு கிடைத்திருக் கிறது. நான் இயக்குநராக வேண் டும் என என் அம்மா உள்ளிட்ட ப லர் விரும்பினார்கள். நிச்சயமாக இந்த படத்தின் மூலம் அவர்களது ஆசையை நிறைவேற்றி விடுவே ன். புராண காலத்தில் சதுரங்கம் வேறு மாதிரி இருந்தது. காலப்போ க்கில் இப்போது வேறு மாதிரி மாறி விட்டது. இதை வைத்து வித்தியா சமான ஒரு கதையை உருவாக்கி இருக்கிறேன். இதற்கு எனது குரு நாதர் இயக்குனர் பாரதி கணேஷ் ரொம்பவே உறுதுணையாக இருந் தார். நிறைய உண்மை சம்பவங்க ளை அடிப்படையாக வைத்து தா ன் இந்த கதையை உருவாக்கி இரு க்கிறேன்” என்று கூறினார்.
*நடிகர் ‘முருகா’ அசோக் குமார் பேசும்போது,*
“தயாரிப்பாளர் வினோத் விசர்மா வை வேறு ஒரு சந்திப்பில் இருந் து எனக்கு நல்ல அறிமுகம் உண் டு. அதன் பிறகு சினிமாவில் அவ ர் அடி எடுத்து வைப்பதாக என்னி டம் கூறியதுடன் நீங்களும் இந்த படத்தில் இருக்கிறீர்கள் என அ ழைத்தார். அதேபோல இயக்குநர் ராமச்சந்திரனையும் ஒரு போராடு ம் உதவி இயக்குனராக நான் பார்த் திருக்கிறேன். ஹைபர் லிங்க் மு றையில் உருவாக்கப்பட்டிருந்த இ ந்த கதையை அவர் சொல்லும் போதே எனக்கு பிடித்து விட்ட து” என்று கூறினார்.
*நடிகர் அஜய் பேசும்போது,*
“இந்த கதையை இயக்குநர் ராமச்ச ந்திரன் என்னிடம் ஒன்றரை மணி நேரம் சொன்னார். பவர்ஃபுல்லா ன க6தைகளுக்கு எப்போதுமே ப வர்ஃபுல்லான டைட்டில்கள் தான் தேவை. ஆரம்பத்தில் இயக்குனர் சொன்ன ஒன்று இரண்டு என் னை பெரிதாக ஈர்க்ககவில்லை. ஆனால் ஒரு வாரம் கழித்து இந்த ‘சதுரங்க வேட்டை ஆரம்பம்’ என் கிற டைட்டிலுடன் கூடிய போஸ்ட ரை எனக்கு அனுப்பினார். பார்த் ததுமே இந்த கதைக்கு மிகப் பொ ரு த்தமான டைட்டில் என்கிற மகி ழ்ச்சி ஏற்பட்டது. அவர் உதவி இய க்குநராக இருக்கும் போதே அவரு டைய உழைப்பு, திறமையை பார் த்து நீங்கள் நிச்சயம் இயக்குநராக மாறுவீர்கள் அப்போது எனக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பீர்களா என கேட்டேன் சொன்னபடியே அவர் இந்த படத்திற்காக என்னை அ ழைத்து ஒரு முக்கிய கதாபாத்திர த்தை கொடுத்து விட்டார். அதே போல நல்ல கதை நல்ல தயாரிப் பாளரை தேடி செல்லும். அந்த வ கையில் தயாரிப்பாளர் வினோத் வி சர்மாவுக்கு இந்த படம் வெற்றி படமாக அமையும் என உறுதியாக சொல்வேன்” என்று கூறினார்.
*தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்*
தயாரிப்பு ; வி வி எஸ் சுப்ரீம் பிலி ம்ஸ் / வினோத் வி சர்மா,இணை தயாரிப்பு ; இந்தியன் ஜிம்கலி & P VR புருசோத் பாண்டிய ன்,டைரக் சன் ; எம் வி ராமச்சந்திர ன்,ஒளிப் பதிவு ; டேனியல் ஜே வில்லியம்ஸ் ,இசை ; பாலசுப்ரமணியம் ஜி,பட த்தொகுப்பு ; ராம் சுதர்சன்,பாடலா சிரியர் ; மதுர கவி –பொத்துவில் அஸ்வின் – கானா சமீலு – கவி ம கேஷ்,நடனம் பாபா பாஸ்கர்,உ டையலங்காரம் ; V. மூர்த் தி,,ஒப்ப னை ; ராஜூ,மக்கள் தொடர்பு ; A. ஜான்