Friday, May 15

TAMIL

தலித் வரலாற்று மாதத்தை முன்னிட்டு நீலம் பண்பாட்டு மையம்
CALTURAL, FLASHNEWS, TAMIL, TAMILNADU

தலித் வரலாற்று மாதத்தை முன்னிட்டு நீலம் பண்பாட்டு மையம்

தலித் வரலாற்று மாதத்தை முன்னிட்டு நீலம் பண்பாட்டு மையம் ஆண்டுதோறும் வானம் கலைத் திருவிழா என்னும் பெயரில் பல்வேறு கலை இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறது.🎉📚💙 ‘வேர்ச்சொல் - தலித் இலக்கியக் கூடுகை’ மற்றும் இலக்கிய விருது வழங்கும் விழா ஏப்ரல் 18 & 19 தேதிகளில் சென்னையில் முழுநாள் நிகழ்வாக நடக்க இருக்கிறது. இலக்கியம், சமூக அரசியல், சினிமா எனப் பல்வேறு அமர்வுகளில் முக்கியமான எழுத்தாளர்கள், கலைஞர்கள், விமர்சகர்கள், தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் எனப் பல தரப்பினர் கலந்துகொள்கிறார்கள்.🖍🌸🎉📚 கவிஞர் என்.டி. ராஜ்குமார் அவர்களுக்கு ‘வேர்ச்சொல் இலக்கிய விருது’ வழங்கப்படுகிறது. இது தவிர அவர் குறித்த நூல் வெளியீடு, ஆவணப்பட வெளியீடு, புத்தகக் கண்காட்சி போன்றவையும் இடம்பெறுகின்றன.✨✨🎉🎉 அறிவுப்பூர்வமான, மகிழ்வான, கொண்டாட்டமான இந்நிகழ்விற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.❤️❤️ உங்கள் வருகை ...
இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி
FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

*இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, கோபி நயினாரின் “காலனி” பட ஃபர்ஸ்ட் லுக் !!* *கோபி நயினார் இயக்கத்ததில், “கலையரசி” ராதிகா நடிக்கும் “காலனி” பட ஃபர்ஸ்ட் லுக் !! அதிதி மூவிஸ் தயாரிப்பில் டாக்டர் R.நாகராஜன் வழங்க, இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில், “கலையரசி” ராதிகா முன்னணி வேடத்தில் நடித்துள்ள “காலனி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டனர். ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற அறம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கோபி நயினார், வெளியீட்டுக்கு தயாராக உள்ள “மனுஷி” படத்திற்கு பின், சமூக அக்கறை மிக்க இன்னொரு அழுத்தமான படைப்பாக “காலனி” படத்தை உருவாக்கியுள்ளார். தாய்கிழவி படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற கலையரசி ராதிகா, இப்படத்தில் மீண்ட...
இயக்குனர் பா.இரஞ்சித் ஒருங்கிணைக்கும் வேர்ச்சொல்
CALTURAL, FLASHNEWS, TAMIL, TAMILNADU

இயக்குனர் பா.இரஞ்சித் ஒருங்கிணைக்கும் வேர்ச்சொல்

*இயக்குனர் பா.இரஞ்சித் ஒருங்கிணைக்கும் வேர்ச்சொல் இலக்கிய விருது 2026* ‘வேர்ச்சொல் இலக்கிய விருது’ என்பது நீலம் பண்பாட்டு மையத்தின் முன்னெடுப்பில் கடந்த நான்கு வருடங்களாகக் கொடுக்கப்படும் விருதாகும். தமிழ் இலக்கியத்தின் திசைவழிப்போக்கை மாற்றியதில் தலித் இலக்கியத்திற்கு முக்கியப் பங்குண்டு. அதில் பெரும் பங்காற்றிய எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரைக் கௌரவிப்பதும், அவர்களது படைப்புகளை ஆய்வுநோக்கில் நினைவுகூர்வதும் ‘வேர்ச்சொல் இலக்கிய விருதின்’ நோக்கமாகும். அதன் அடிப்படையில் கடந்த 2022ஆம் ஆண்டுக்கான ‘வேர்ச்சொல் இலக்கிய விருது’ அறிஞர் ராஜ் கௌதமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 2023ஆம் ஆண்டு எழுத்தாளர், கலை விமர்சகர் இந்திரன் அவர்களுக்கும், 2024ஆம் ஆண்டுக்கான விருது எழுத்தாளர் பாமா அவர்களுக்கும், 2025ஆம் ஆண்டுக்கான விருது எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர் ப.சிவகாமி அவர்களுக்கும் வழங்கப்பட்டது. ...
மிஸ்டர் எக்ஸ் வேறு.. துரந்தர் வேறு” ; தெளிவுபடுத்திய இயக்குநர்
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மிஸ்டர் எக்ஸ் வேறு.. துரந்தர் வேறு” ; தெளிவுபடுத்திய இயக்குநர்

*“மிஸ்டர் எக்ஸ் வேறு.. துரந்தர் வேறு” ; தெளிவுபடுத்திய இயக்குநர் மனு ஆனந்த்* *“ஏழு உண்மை சம்பவங்களை ஒன்றிணைத்து உருவான படம் தான் மிஸ்டர் எக்ஸ்” ; இயக்குநர் மனு ஆனந்த்* *“’மிஸ்டர் எக்ஸ்’ உருவாக காரணமான இரண்டு நபர்களின் பெயர்களை நன்றிக் கார்டில் கூட போட முடியாது” ; இயக்குநர் மனு ஆனந்த்* *“எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் கௌதம் ராம் கார்த்திக் கதாபாத்திரத்தில் தான் நான் நடித்திருப்பேன்” ; ஆர்யா ஓபன் டாக்* *“மிஸ்டர் எக்ஸ் கதை குறித்து இயக்குநரிடம் பல சந்தேகங்களைக் கேட்டேன்” ; மஞ்சு வாரியர்* *“மிஸ்டர் எக்ஸ் கதையைக் கேட்டதும் இயக்குநர் ஏதோ ரீல் விடுகிறார் என்று நினைத்தேன்’ ; சரத்குமார் .* *“மிஸ்டர் எக்ஸ் பார்த்தபோது எனக்கே ஜேம்ஸ்பாண்ட் படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது” ; சரத்குமார்* *“ஆர்யா எனக்கு செய்தது போலவே நானும் என்னுடன் நடிப்பவர்களுக்கு செய்வேன்” ; கௌதம் ராம் கார்த்திக்*...
அமைதியான ஒரு கடற்கரை நகரத்தில் நடைபெறும் விசித்திரமான குற்றச் சம்பவம்,
ONLINE SERIES, PRESS MEET, TAMIL, TAMILNADU

அமைதியான ஒரு கடற்கரை நகரத்தில் நடைபெறும் விசித்திரமான குற்றச் சம்பவம்,

தமிழ் மற்றும் மலையாள ZEE5 இன்று தங்களது அடுத்த ஒரிஜினல் சீரிஸான ‘காக்கி சர்கஸ்’ ஐ அறிவித்துள்ளது. வித்தியாசமான நகைச்சுவை, அதிரடி, கற்பனை மற்றும் திரில்லர் அம்சங்கள் கலந்த இந்த ஏழு எபிசோடுகள் கொண்ட சீரிஸ், ஒரு சப்-ஜெயிலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. தயாரிப்பு நிலையில் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம் ( ‘Once Upon a Time in Kayamkulam’ ) என்ற பெயரில் உருவான இந்த சீரிஸ், தற்போது ‘காக்கி சர்கஸ்’ என்ற புதிய பெயரில் பார்வையாளர்களை சந்திக்க வருகிறது. இந்த சீரிஸின் தனித்துவமான நகைச்சுவை, விசித்திரமான கதாபாத்திரங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிரம்பிய உலகத்தை இந்த தலைப்பு அழகாக பிரதிபலிக்கிறது. இந்த சீரிஸை அமீன் பாரிஃப் எழுதி இயக்கியுள்ளார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். மேலும், முனிஷ்காந்த், சுபாஷ் செல்வம், ராஜேஷ் மாதவன், கவுதமி ...
IT சோதனைக்குபின் ஜாபர் சாதிக் விளக்கம் !!
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

IT சோதனைக்குபின் ஜாபர் சாதிக் விளக்கம் !!

IT சோதனைக்குபின் ஜாபர் சாதிக் விளக்கம் !! பிரபல தொழிலதிபர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர், முன்னாள் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளராக இருந்தவருமான ஜாபர் சாதிக் அவர்களின் , சென்னை வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் 2026 ஏப்ரல் 6 ஆம் தேதி, வருமான வரித்துறை (IT), என் சி பி மற்றும் தேர்தல் பறக்கும் படையினரால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இது குறித்தும் அவரது தயாரிப்பில் உருவாகி வரும் படங்கள் குறித்தும் திரு ஜாபர் சாதிக் பத்திரிக்கை நண்பர்களைச் சந்தித்து தனது தரப்பிலான விளக்கங்களை அளித்தார். இது குறித்து ஜாபர் சாதிக் கூறியதாவது.., என்னைச் சுற்றி பரவி வரும் பல தவறான தகவல்களுக்கு நேராக பதில் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதால்தான். உங்கள் முன் வந்திருக்கிறேன். 6 ஆம் தேதி காலை சுமார் 6 மணியளவில் அதிகாரிகள் என் வீட்டுக்கு வந்தார்கள். அந்த சோதனை 8 ஆம் அதிகாலை 3 மண...
முத்து என்கிற காட்டான் வெற்றி விழா !!*
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

முத்து என்கிற காட்டான் வெற்றி விழா !!*

*முத்து என்கிற காட்டான் வெற்றி விழா !!* விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோ ஹாட் ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், B. அஜித் குமார், M. மணிகண்டன் இணைந்து இயக்க, மாறுபட்ட களத்தில் உருவான சீரிஸ், “முத்து என்கிற காட்டான்”. ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில், 2026 மார்ச் 27 ஆம் தேதி வெளியான இந்த சீரிஸ் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. வெளியான குறுகிய காலத்தில், மிகப்பெரிய அளவிலான பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. படக்குழுவினர் அனைவரும் இணைந்து கேக் வெட்டி இந்த வெற்றியைக் கொண்டாடியுள்ளனர். இந்நிகழ்வினில்.. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசியதாவது.., இந்த புராஜக்ட் எனக்கு ரொம்ப சந்தோஷமான அனுபவம். நாங்க பண்ணுற வேலை எல்லாருக்கும் நிறைவாக இருக்கனும...
பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான ‘
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான ‘

*பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட முன் வெளியீட்டு விழா !!* தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படத்தின் முன் வெளியீட்டு தனியார் கல்லூரி அரங்கில், ஆயிரக்கணக்கான ரசிகர் பட்டாளத்தின் முன்னிலையில், படக்குழுவினர் கலந்துகொள்ள வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் எடிட்டர் பிரதீப் E ராகவ் பேசியதாவது.., இந்த படத்தில் வேலை செய்தது எனக்கு ஒரு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. அந்த அனுபவத்தை வைத்து தனியே ஒரு படம் எடுக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு நிறைய நல்ல நினைவுகள் இந்த பயணத்...
ஏப்ரல்-17ல் திரையரங்குகளில் வெளியாகிறது ‘
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஏப்ரல்-17ல் திரையரங்குகளில் வெளியாகிறது ‘

*ஏப்ரல்-17ல் திரையரங்குகளில் வெளியாகிறது 'மிஸ்டர் எக்ஸ்'* சர்தார், லப்பர் பந்து உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லஷ்மன்குமார் , மேவரிக் மூவிஸ் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr X) திரைப்படம் வரும் ஏப்-17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.. ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கவுதம் கார்த்திக் சரத்குமார், மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன், அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன்,காளி வெங்கட் மற்றும் ஜெயப்ரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.. எப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். கனா, நெஞ்சுக்கு நீதி படங்களுக்கு இசையமைத்த திபு நிபுணன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் அதிரடி சண்டைக்காட்சிகள் இந்தியாவில் ராஜஸ்தான் தூத்துக்குடி குலு...
zபடை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு
EDUCATION, FLASHNEWS, INDIA, TAMIL

zபடை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு

zபடை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆதரவளிப்பதற்காக, ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL) நிறுவனம் இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையுடன் (ITBP) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. • இந்தியா முழுவதும் உள்ள AESL மையங்களில் சேரும் பணியில் இருக்கும் ITBP வீரர்கள், முன்னாள் படை வீரர்கள், வீர விருது பெற்றவர்கள் மற்றும் தியாகிகளின் குடும்பத்தினருக்கு நாடு தழுவிய கல்வி உதவித்தொகைகளையும் சிறப்பு ஏற்பாடுகளையும் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் வழங்கவுள்ளது. • ஆகாஷ் ஐந்தாண்டு கல்வி ஆதரவுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டம், நாடு முழுவதும் உள்ள ITBP குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், முறையான பயிற்சி மைய அணுகல், நிதியுதவி மற்றும் திறமை அடிப்படையிலான தேர்வுகளை வழங்கும். • இந்திய ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) மற்றும் மத்தி...