Monday, July 13

POLTICAL NEWS

அப்பாவை இழந்த பின் செய்வதறியாது திகைத்து நிற்கும் நான்,
DEATH, FLASHNEWS, POLTICAL NEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அப்பாவை இழந்த பின் செய்வதறியாது திகைத்து நிற்கும் நான்,

அப்பாவை இழந்த பின் செய்வதறியாது திகைத்து நிற்கும் நான், முறையாக ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் தேடி எழுதுகிறேனே தவிர, மனதின் அடிதளத்தில் எனக்கு ஆறுதல் சொன்ன அனைத்து உயர்ந்த உள்ளங்களுக்கும் ஆத்மார்த்தமாய் நன்றி. சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். குறிப்பாக தி மு க தலைவர் திரு ஸ்டாலின் ஐயா @mkstalin மீது எங்கள் குடும்பத்திற்கு உள்ள மரியாதை உள்ளத்தின் உட்பகுதியிலும் உயர்வாய் உள்ளது. அப்பாவுக்கு (50-வது ) நடந்த தங்க விழா ஆண்டில் தன்னுடைய தங்க மனதோடு வாழ்த்தியவர் முன்னாள் முதல்வரும் என்னாளும் எங்கள் அன்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமான திருமிகு ஸ்டாலின் ஐயா அவர்கள். அப்பாவின் மறைவிற்காக என் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வந்த சகோதரர் @Udhaystalin அவர்களுக்கும் , அவர்களுடன் உடன் வந்து ஆறுதல் உரைத்த முக்கிய அமைச்சர்கள் மற்றும் அனைவருக்கும எங்கள் உளங்கனிந்த நன்றியினை உரித்தாக...
இயக்குநரின் கருத்துகளைக் கேட்டறிந்த மாண்புமிகு முதலமைச்சர்,
POLTICAL NEWS, TAMIL

இயக்குநரின் கருத்துகளைக் கேட்டறிந்த மாண்புமிகு முதலமைச்சர்,

புதுச்சேரி முதலமைச்சரைச் சந்தித்து ‘சினிமாவின் ஆன்மா’ நூலை வழங்கினார் இயக்குநர் சீனு ராமசாமி: பள்ளிக் கல்வித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதி! சென்னை/புதுச்சேரி  பிரபல திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி  மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து, தான் எழுதிய "சினிமாவின் ஆன்மா" (சிறார்கள் திரைப்பட ரசனைக் கல்வி) என்ற நூலை வழங்கி, அதன் நோக்கம் குறித்து விரிவாக விளக்கினார். இயக்குநரின் கருத்துகளைக் கேட்டறிந்த மாண்புமிகு முதலமைச்சர், புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை மூலம் இந்நூல் குறித்து தீவிர ஆய்வு செய்து, தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளார். சந்தியா பதிப்பகத்தின் (திரு. சந்தியா நடராஜன்) வெளியீடாக வந்துள்ள இந்நூல் குறித்த சுருக்கமான விவரங்கள் வருமாறு: நூலின் முக்கிய நோக்கம்: * பக்குவப்பட்ட நல்மனிதர்களை உருவாக்குதல்: இது க...
உசிலம்பட்டி தொகுதி 58 கால்வாய் விவசாய நீர்ப்பாசனத்
FLASHNEWS, POLTICAL NEWS, TAMIL, TAMILNADU

உசிலம்பட்டி தொகுதி 58 கால்வாய் விவசாய நீர்ப்பாசனத்

58 கால்வாய் நீர்ப்பாசன திட்டத்தை 58 அடியில் இருந்தே கொடுக்க வேண்டும்...* *உசிலம்பட்டி தொகுதி 58 கால்வாய் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்திற்கு நிரந்தர அரசாணை கோரி கோரிக்கை மனு வழங்கப்பட்டது* மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 58 கால்வாய் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தில், 58 அடி மட்டத்திலிருந்தே உபரி நீரை வெளியேற்றும் நடைமுறையை நிரந்தர அரசாணை மூலம் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. விஜய் அவர்களின் முன்னிலையில் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. மேலும், மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்களிடமும், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்களிடமும் இதுகுறித்து கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. 58 க...
The latest example of this influence came when Prime Minister Narendra Modi
ENGLISH, FLASHNEWS, INDIA, POLTICAL NEWS

The latest example of this influence came when Prime Minister Narendra Modi

PM Narendra Modi Using AA23 Theme Music Reflects Allu Arjun’s Cultural Influence.  Long before Pan India became an industry trend, Allu Arjun had already built a massive following across the country. His films, songs, dance moves and screen presence have consistently connected with audiences beyond language and regional boundaries. The latest example of this influence came when Prime Minister Narendra Modi used the AA23 theme music in one of his social media posts. More than just a creative choice, it reflects the popularity and cultural relevance associated with Allu Arjun today. What makes it even more significant is that AA23 is still in its early stages, yet its theme music has already found a place in mainstream conversations. Very few actors command this level of antic...
இக்கல்வியின் கட்டாயத் தேவை குறித்து இயக்குநர் சீனு ராமசாமி
POLTICAL NEWS, PREVIEW, TAMIL, TAMILNADU

இக்கல்வியின் கட்டாயத் தேவை குறித்து இயக்குநர் சீனு ராமசாமி

மத்திய அமைச்சர் திரு. எல். முருகனுடன் கவிஞரும் இயக்குநருமான சீனு ராமசாமி சந்திப்பு, தான் எழுதிய – ‘சினிமாவின் ஆன்மா’ நூலை 25 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க மத்திய அரசு ஆதரவு!* *சென்னை:* கவிஞரும் பிரபல திரைப்பட இயக்குநருமான சீனு ராமசாமி அவர்கள், இன்று மதியம் மாண்புமிகு மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் திரு. எல். முருகன் அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது, தான் எழுதிய ‘சினிமாவின் ஆன்மா (சிறார்கள் சினிமா ரசனைக் கல்வி)’ நூலின் சமகால சமூகத் தேவை குறித்து அமைச்சருடன் அவர் விரிவாகவும் ஆழமாகவும் விவாதித்தார். உலகக் குழந்தைகளின் சிறந்த திரைப்படங்கள் மற்றும் இந்தியாவில் எடுக்கப்பட்ட நேர்த்தியான, உலக சினிமா தரத்திலான மிகச் சிறந்த சிறார் திரைப்படங்களைத் தொகுத்து, சிறார்களின் சினிமா ரசனையை ஒரு முறையான வாழ்வியல் கல்வியாக...
சகல சௌகர்ய விமானத்தில் பல வருடம் பயணித்தவர்
POLTICAL NEWS, TAMIL, TAMILNADU

சகல சௌகர்ய விமானத்தில் பல வருடம் பயணித்தவர்

கருத்துக் கணிப்புகளுக்கு கடுக்காய் கஷாயம் கொடுத்து விட்டு, மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆட்சியமைத்து, AM முதல் PM வரை ஒரு சாதாரண அரசு அலுவலராகவே பணியாற்றும் ஒரு CM ! சினிமா ஒரு சொகுசு சொர்க்கபுரி. சகல சௌகர்ய விமானத்தில் பல வருடம் பயணித்தவர் சட்டென மாறிய வானிலைப் போல CM நாற்காலியில் அமர்ந்ததுமே தன்னை மிகுந்த பொறுப்புள்ளவராக பொருத்திக் கொள்வது சாத்தியமா? சத்தியமாய் சந்தேகம் மேலெழும். சினிமாவிலிருந்து சென்றவர் என்பதால் ஒரு செல்ல ப்ரியம் கலந்த கர்வத்துடன் கூடிய மகிழ்ச்சியுடன் சந்தித்தேன் நம் மாண்புமிகு விஜய் அவர்களை. புகைப்படம் எடுக்கையில் தோளின் மீது கை வைக்கையில் “ கை போட்டுக்கலாமா?”என்றார் பணிவாக. “சார்ர்ர்! என்ன சார் நானில்லை உங்ககிட்ட கேட்கனும்” என்றேன் “போடுங்க” என்று அவரே என் கையை இழுத்து போட்டுக் கொண்டார். திரையை விலக்கி நான் காட்டிய photo frame-ஐ பார்த்து “இப்படி ஏதாவது வர...
தேவர் திரைப்பட நடிகர் ஜெ. எம்.பஷீர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்
FLASHNEWS, POLTICAL NEWS, TAMIL, TAMILNADU

தேவர் திரைப்பட நடிகர் ஜெ. எம்.பஷீர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்

*காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்த வரவேண்டும்:* *திரைப்பட நடிகர் ஜெ.எம்.பஷீர் வேண்டுகோள்!* தேவர் திரைப்பட நடிகர் ஜெ. எம்.பஷீர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் உலக அதிசய தலைவா..! ஒரிஜினல் சிறுபான்மை இன காவலரே வரும் ஜுன்5 சென்னை திருவல்லிக்கேணியில் பழமை வாய்ந்த பெரிய பள்ளி வாசல் வளாகத்தில் அமைந்துள்ள கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாள் அன்று அவரது சமாதிக்கு வந்து தங்களது பொற்கரங்களால் பொன்னாடை போத்திட வேண்டுகிறோம் தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக கூட்டணி ஆட்சி அமைத்து காயிதே மில்லத் தொடங்கிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை ஆட்சியில் பங்குபெற செய்து அமைச்சராக்கி அழகு பார்க்கும் ஒரே தலைவர் நீங்கள்தான். நாளுக்கு நாள் தங்களது புகழ் கூடிக்கொண்டே போகின்றது. உங்களது வாக்கு அப்படியே பலிக்கின்றது. நடக்கப் போவதை தீர்க்கதரிசனத்துடன்...
போதையில்லா சமூகத்தை உருவாக்கி பெண்களுக்கான பாதுகாப்பினை
POLTICAL NEWS, TAMIL, TAMILNADU

போதையில்லா சமூகத்தை உருவாக்கி பெண்களுக்கான பாதுகாப்பினை

தமிழ்நாட்டு அரசியலில் ஆகப்பெறும் அதிர்வுகளோடு வெற்றி பெற்றிருக்கும் தவெகவின் தலைவர் சகோதரர் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். போதையில்லா சமூகத்தை உருவாக்கி பெண்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்து கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதோடு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துங்கள். உங்கள் சாதனைகள் தொடரட்டும். வ.கௌதமன் பொதுச் செயலாளார் தமிழ்ப் பேரரசு கட்சி "சோழன் குடில்"...
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ஒய். ஜி. மகேந்திரா
POLTICAL NEWS, PREVIEW, TAMIL, TAMILNADU

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ஒய். ஜி. மகேந்திரா

*விஜய் எப்படி ஜெயித்தார்?* - நடிகர் ஒய். ஜி. மகேந்திரா தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ஒய். ஜி. மகேந்திரா தெரிவித்துள்ள கருத்து வருமாறு: "விஜய் எப்படி ஜெயித்தார்? எதற்காக ஜெயித்தார்? ஒரு சினிமாக்காரரா ஜெயித்தார்? போன்ற கேள்விகளுக்கெல்லாம் இனிமேல் இடமே கிடையாது. ஒரே ஒரு காரணத்துக்காகத்தான் விஜய் ஜெயித்தார். மக்கள் விரும்பினார்கள், அவரைத் தேர்ந்தெடுத்தார்கள். அவ்வளவுதான் ஆர்கியூமென்ட் க்ளோஸ்டு (Argument Closed). மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. இது ஒரு மாற்றத்திற்கான முன்னெடுப்பு. தேங்கிக் கிடந்த தண்ணீரை ஒரு புது வெள்ளம் வந்து அடிக்க வேண்டும், புனருத்தாரணம் செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள். அந்தப் புது வெள்ளம் விஜய் தான் என்று அவர்கள் தீர்மானித்தார்கள், அவரைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒரு சக நடிகராக நான் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து...
சென்னை தி நகர் தொகுதியில் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் எதிர்த்து
POLTICAL NEWS, PREVIEW, TAMIL, TAMILNADU

சென்னை தி நகர் தொகுதியில் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் எதிர்த்து

*சென்னை தி நகர் தொகுதியில் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் எதிர்த்து களம் இறங்கும் விஜய் அவர்களின் மாநிலச் செயலாளர்* கடந்த 28 ஆண்டு காலமாக நடிகர் விஜய் அவர்களுடன் மாநிலச் செயலாளராக பணியாற்றி கொண்டு இருந்தவர் ரவிராஜா இவர் தற்போது சென்னை தி நகர் தொகுதியில் புஸ்ஸி ஆனந்த் அவர்களை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக போட்டியிட போவதாக செய்திகள் வந்துள்ளன பத்திரிக்கையாளர், கதாசிரியர், குறும்பட இயக்குனர், மக்கள் தொடர்பாளர் ஆகிய பொறுப்புகளை வகித்திருந்த இவர் வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறார் புரட்சி இயக்குனர் SAC அவர்களின் ஆதரவாக இவரும் .... 10 மாவட்ட தலைவர்களும் செயல்பட்ட காரணத்தினால் இவர்களை புஸ்ஸிஆனந்த் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நீக்கம் செய்து விட்டார். என்றாவது ஒரு நாள் விஜய் நம்மை அழைப்பார் என காத்துக் கொண்டிருந்தார்களாம் இந்த நிர்வாகிகள் மீது இதுவரை எந்த அவதூறு செய்திகளோ க...